அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்
அரச சேவையின் சம்பள திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களின் சம்பளத்தை திருத்துவதற்கு ஜனாதிபதியினால் பிரேரணை முன்வைக்கப்பட்டது.
இந்த பிரேரணையின் அடிப்படையில், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மற்றும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஆகியோர் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.
அமைச்சரவை அனுமதி
ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட வேதன அளவுத் திட்டத்திற்கமைய வேதனக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யோசனையைக் கருத்திற் கொண்டு அமைச்சரவை கீழ் காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
* அரச சேவையின் சம்பள திருத்தம் தொடர்பாக அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கைகளை வழங்குவதற்கு அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கான அதிகாரப் பிரதிநிதித்துவம்.
* மாநில கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் முழு அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு சுற்றறிக்கையை வழங்க நிதி, கொள்முதல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளருக்கு அதிகாரம் அளித்தல். - என்பனவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 6 நாட்கள் முன்

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
