மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும் ஆசிரிய மாணவர்கள் பலருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் கல்வி பயின்றுவரும் இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று (18) மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கோவிட்தொற்று உறுதி கண்டறியப்பட்டதையடுத்து அவர்களைத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிரியர் கலாசாலை அதிபர் எம்.பி. யுனைட் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாகக் கடந்த 2020 ம் ஆண்டு விடுமுறையில் சென்ற ஆசிரிய மாணவர்கள் தொடர்ந்து விடுமுறையிலிருந்த நிலையில் சூம் முறையிலான கவ்வி கற்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆசிரியர் கலாசாலை இன்று மீண்டும் திறக்கப்பட்டதையடுத்து அங்கு கல்வி பயின்றுவரும் 202 இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில்
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேருக்கும் அம்பாறை மற்றும் ஏனைய
மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்
தெரிவித்துள்ளார்.