மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் - வடக்கு மாகாண ஆளுநர்

Human Rights Commission Of Sri Lanka Sri Lankan Tamils Northern Province of Sri Lanka
By Theepan Dec 13, 2024 08:53 AM GMT
Report

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் தின நிகழ்வில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கூடுதல் கரிசனை

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகத்தான் அதனை நிலைநாட்ட முடியும். பொலிஸார் சில இடங்களில் முறைப்பாடுகளை செய்யச் செல்லும் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் - வடக்கு மாகாண ஆளுநர் | Governor Calls For Disability Rights Focus

இத்தகைய பாரபட்சங்கள் இல்லாதொழிக்கப்படுவது மனித உரிமைகளை நிலைநாட்ட உதவும். எமது சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும்.

எமது அரச அலுவலகங்களை அவர்கள் இலகுவாக அணுகுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படவேண்டும். யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தேன்.

மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கூடுதல் கரிசனையுடன் நாம் செயற்படவேண்டும்” என்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கான காரணம் வெளியானது

அதிகளவான முறைப்பாடுகள்

இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், ஆளுநரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பிரச்சினைகள் தீர்ந்து விடும் - வடக்கு மாகாண ஆளுநர் | Governor Calls For Disability Rights Focus

இங்கு தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், கைதுகளின் போதான சித்திரவதை தொடர்பிலும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் பாரபட்சம் தொடர்பிலுமே அதிகளவான முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டார்.

அத்துடன் அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகுதலுக்குரிய வசதிகள் போதுமானளவில் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கின் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராக இருந்தவர். அவருக்கு இந்த மாகாணத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் நன்கு தெரியும். நிர்வாகத் தொய்வும் தெரியும். அப்படியான ஒருவரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பது தீர்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அநுர எச்சரிக்கை

யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்: அநுர எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW    

GalleryGallery
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US