இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் நேற்றையதினம் (12.12.2024) கண்டி பல்லேகல மைதானத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆட்டநிர்ணய கோரிக்கை
காலி அணியின் உரிமையாளரான பிரேம் தாக்கூர், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் ஒருவரிடம் ஆட்டநிர்ணய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
எனினும், கோரிக்கையை மறுத்த குறித்த வீரர், பொலிஸாரிடம் முறைப்பாடளித்த நிலையில், பிரேம் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
