அரசாங்கத்தின் நிவாரணத் திட்டம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்!
நாட்டில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இந்த நலன்புரி பயன் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அறிவித்துள்ளார்.
நான்கு பிரிவுகளின் கீழ் இவ்வாறு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில், மிகவும் வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் அடையாளம் காணப்படும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் 15 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

நிவாரணம் வழங்கும் நலன்புரி பயன் வேலைத்திட்டம்
வறியவர்கள் என்ற பிரிவின் கீழ் எட்டு இலட்சம் குடும்பங்களுக்கு மூன்று வருடங்கள் வரை மாதாந்தம் எட்டாயிரத்து 500 ரூபா வழங்கப்படவுள்ளது.
அவதானத்திற்கு உள்ளானவர்கள் என்ற பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படும்.
சாதாரண பிரிவின் கீழ் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை இரண்டாயிரத்து 500 ரூபா வீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பயனாளிகளை வலுவூட்டுவது
அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்
சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri