மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடியாத நிலையில் அரசாங்கம்
அரசாங்கத்தினால் மின்சாரத்தை கூட தொடர்ச்சியாக வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
24 மணித்தியாலத்திற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியாத நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மின்சாரம் துண்டிக்கப்படாது என கூறிய சில நொடிகளில் மின்வெட்டு குறித்து அதிகாரிகள் நேர அட்டவணையை வெளியிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் அமைச்சர் வழங்கும் உறுதிமொழிகளை எந்த வகையிலும் நம்ப முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.