அரசாங்கம் மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றது – பாக்கீர் மாக்கார்
அரசாங்கம் மக்களைப் பிழையான வழியில் திசை திருப்ப முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவி வரும் முக்கியமான பிரச்சினைகளை மூடி மறைக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற செய்திகளை அரசாங்கம் பூதாகாரமாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மேயரின் கைது விவகாரமும் இவ்வாறான ஓர் அணுகுமுறையேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான தந்திரோபாயங்களை அரசாங்கம் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.