சம்பள அதிகரிப்பு கோரிக்கை: நாட்டை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்தல் - அமைச்சர் வழங்கியுள்ள பதில்
அதிக சம்பளம் எதிர்பார்த்து சலுகைகளை கோரி நாட்டை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்தும் குழுக்களுக்கு அரசாங்கம் அடிபணியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார சிரமங்களைப் புரிந்துகொண்டு, இலவசக் கல்வியைப் பயன்படுத்தி நாட்டிற்கு சேவை செய்ய தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும்.
அரசாங்கத்திற்கு முக்கியமானவர்கள்
யாராவது நம்மை அச்சுறுத்த வந்தால், நாம் அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னால், அவர்கள் வேறு எதையாவது சுட்டிக்காட்டி மீண்டும் இதேபோன்ற அச்சுறுத்தல்களை விடுப்பார்கள். நாட்டில் தங்கி சேவை செய்பவர்கள் அச்சுறுத்தல் விடுப்பவர்களை விட அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியம்.
முந்தைய நிர்வாகங்களின் போது இருந்தது போல, அரசியல் தேவையின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மக்களை அரச சேவையில் கட்டாயப்படுத்தும் முறையை தற்போதைய அரசாங்கம் கைவிட்டுள்ளது.

ஆட்சேர்ப்பு
அதற்கு பதிலாக, பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு நிறுவனங்களின் உண்மையான தேவைகளைக் கண்டறிந்து முறையான திட்டத்தின்படி ஆட்சேர்ப்புகளைச் செய்யும்.
அரச சேவையில் நுழைந்த பிறகு, சாதாரண சுதந்திரமான வாழ்க்கையை விட பொறுப்பான தொழில்முறை வாழ்க்கைக்கு பழக வேண்டும், அரசியல் அதிகாரமும் இதேபோன்ற பொறுப்பால் பிணைக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 2 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam