இன்று முதல் வழமைக்கு திரும்பும் அரச சேவைகள்!
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூன்று மாதங்களாக முடங்கியிருந்த பொது சேவை இன்று முதல் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்றின் மூன்றாவது அலை காரணமாக, அரச ஊழியர்களை தேவைக்கேற்ப பணிக்கு அமர்த்தும் அதிகாரம் ஏப்ரல் 27 முதல் நிறுவனத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.
இது குறித்து பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறி ஒரு சிறப்பு சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதன்படி, நிறுவனத் தலைவர்கள் மாதத்தில் எட்டு நாட்கள் பொது ஊழியர்களை அழைக்க அதிகாரம் பெற்றனர். தேவைப்படும்போது வாரத்தில் மூன்று நாட்கள் வேலைக்கு அழைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, பொதுச் சேவையில் கர்ப்பிணித் தாய்மார்களை அழைப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கர்ப்பிணித் தாய்மார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கடுமையான தொற்றுநோய் சூழ்நிலையால் அச்சுறுத்தப்படுவதாகவும் சுகாதார சேவைகள் இயக்குனர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் ஏராளமான மக்கள் தடுப்பூசி போடப்பட்டதை கணக்கில் எடுத்துக்கொண்டு பொது சேவையை முன்னெடுக்க அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.
இதன்படி, பொது சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பவுள்ளது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan