அரசாங்கத்தினால் நாட்டில் மக்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் - சஜித்

Sri lanka Sajith Premadasa Gotabhaya Rajapaksha
By Kanamirtha Oct 22, 2021 01:37 PM GMT
Report

கோட்டா(Gotapaya Rajapaksa), மகிந்த(Mahinda Rajapaksa) தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக 220 இலட்சம் இலங்கை மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று   எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது நாட்டு மக்களை மீண்டும் 70களின் யுகத்திற்குக் கொண்டு செல்லவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியபோது இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கத்திற்கு மக்கள் பணியைச் செய்யமுடியாது. ஆனால் தினசரி பொருட்கள் விலைகளை மாத்திரம் உயர்த்த முடியும் என்பதை நிரூபித்து வருகிறது. மக்கள் இன்று எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்துள்ளனர்.


ஆனால் இலங்கை அரசாங்கம் இவர்களின் கோரிக்கைக்கு இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையையும் அதிகரித்திருக்கின்றது. ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் அரசாங்கம் மக்களுக்கு நிறைவேற்றவில்லை.

பொருட்களின் விலை அதிகரிப்பால் ஓய்வூதியர்கள் மாத்திரமல்ல, விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களுக்கு சிறியதொரு தொகையை வழங்கி, அதனை எரிவாயு விலையை அதிகரிக்கச்செய்து பெற்றிருக்கின்றது.

கெளரவமாக வாழ்ந்துவந்த விவசாயிகளை வீதிக்கு இழுத்திருக்கின்றது. அத்துடன் அரசாங்கம் வரிசை யுகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பால்மாவுக்கு வரிசை, எரிவாயு பெற்றுக்கொள்ள வரிசை, சீமெந்து வாங்குவதற்கு வரிசை என அரசாங்கம் 70, 77 யுகத்தையே மீண்டும் ஏற்படுத்தி இருக்கின்றது.

69 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது இருண்ட யுகத்தை உருவாக்குவதற்கா? என கேட்கிறோம். இலங்கை அரசாங்கத்தின் பிழையான முகாமைத்துவம் காரணமாக நாட்டில் இருக்கும் 220இலட்சம் மக்களும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் இதற்கா மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டீர்கள் எனக் கேட்கின்றேன்? எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US