அரசாங்கம் காலம் காலமாக பிரித்தாளும் தந்திரங்களை முன்னெடுத்து வருகின்றது: வேலன் சுவாமிகள் (video)
வடக்கிலே தான் தமிழர்களுக்கு பிரச்சினைகள் உள்ளன, வடக்கிலேதான் தமிழர்கள் உள்ளார்கள் என்ற போலியான முகத்தினை இலங்கை அரசாங்கம் காலம் காலமாக பிரித்தாளும் தந்திரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை எங்களது உயிர்களை மீறி எங்களின் பிணங்களில் ஏறித்தான் பிரிக்க முடியும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணரவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தின நாளை கரி நாளாக பிரகடனப்படுத்தி, கடந்த நான்காம் திகதி வடக்கு, கிழக்கு இணைந்த பல்கலைக்கழக மாணவர்களினால் யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட தமிழர் எழுச்சி பேரணி திருகோணமலை நகரினை வந்தடைந்துள்ளது.
பேரணி முன்னெடுப்பு
வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் உள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர்களின் தாயகத்தினை வலியுறுத்தி இந்த எழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் தேசியம் சார்ந்த அரசியல்வாதிகளும் ஆதரவு வழங்கி வரும் நிலையில் இன்றைய தினம் திருகோணமலைக்கு எழுச்சியுடன் பேரணி வந்தடைந்துள்ளது.
இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருகோணமலையில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு
அதனை தொடர்ந்து திருகோணமலையில் தமிழ் பேசும் சமூகம் கடந்த 75 வருடங்களாக எதிர்கொண்டு வரும் பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமிழர் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டடு தமது உரிமையினை வலியுறுத்தி நின்றனர்.
திருகோணமலை நகருக்கு வந்த பேரணி நகரில் உள்ள சிவன் ஆலயத்தில் ஈகைச்சுடர் ஏற்றி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம் உட்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
