மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க அரசு திட்டம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இதனை கூறியுள்ளார்.
படையினருக்கு எதிராக மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணையாளரை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அந்தவகையில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட் மற்றும் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அழைப்பு விடுக்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் இந்த அறிக்கை பக்கச்சார்பானது என குறிப்பிட்டுள்ள இலங்கை அரசாங்கம் அதனை நிராகரிப்பதாகவும் கூறியுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட்டை இலங்கைக்கு அழைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam
ரஜினிகாந்த் முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை.. நடிகர் மீசை ராஜேந்திரன் வீட்டு திருமணம்.. வீடியோ இதோ Cineulagam
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri