உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டம்
உரிமையாளர்களினால் விடுவிக்க முடியாத பொருட்களை ஏலம் விட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பணம் வழக்கு தொடர்பான கணக்கில் வைப்பு செய்யப்பட்டு வழக்கு முடிந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, வழக்கு பொருள் வைத்திருப்பவர் வழக்கில் தோல்வி அடைந்தால், உரிய பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
வழக்கு பொருட்கள்
வழக்கு விசாரணைகள் நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் பல வழக்கு பொருட்கள் அழிவடைவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான சட்டங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகின்றது.

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 3 மணி நேரம் முன்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri
