பாதிரியாரை தாக்கிய சிறப்பு அதிகாரிகள்.. அடையாள அணிவகுப்புக்கு உத்தரவு
கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த ஆறு பொலிஸ் அதிகாரிகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு ஒன்றை நடத்துமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த பொலிஸ் அதிகாரிகள், கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கத்தோலிக்க பாதிரியாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் அதிகாரிகள் 06 பேர் நேற்று முன்தினம் (25) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
அவர்கள், கம்பஹாவின் அஸ்கிரிய - வல்பொல பகுதியில் பணியில் இருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று தொடர்ந்து சென்று கொண்டிருந்ததாகவும், அங்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரை துரத்திச் சென்று பிடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்..
கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டதெனியாவில் உள்ள ஒரு பண்ணையின் தோட்ட உதவி நிர்வாகியாகப் பணிபுரியும் இந்த பாதிரியார், திப்பிட்டிகொட தேவாலயத்தில் இருந்து தெய்வீகப் பலிகளை வழங்குவதற்காக சென்று கொண்டிருந்துள்ளார்.

இதன்போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த பாதிரியார், தாக்குதல் நடத்தப்பட்ட போது பாதிரியார் உடையணிந்திருந்ததாகவும், மோட்டார் சைக்கிள் விசேட பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பிறகு அவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் உயர் பாதிரியார்களுக்கு அவர் மீதான இந்தத் தாக்குதல் குறித்து பாதிரியார் தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிகாரிகளை பொலிஸ் தலைமையகம் இடைநீக்கம் செய்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் (25) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளனர்.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam