மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் ஹந்துன்நெத்தி
கோவிட் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள், நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அரசாங்கம், தற்போதாவது கவனம் செலுத்த வேண்டும் என்று ஜே.வி.பி கோரியுள்ளது.
பொருளாதார மற்றும் சமூக அம்சங்களில் முன்னோக்கிச் செல்ல ஒரே வழி தொற்று நோயிலிருந்து விரைவாக விடுபடுவது மாத்திரமே என ஜே.வி.பி. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த தவறிவிட்டது.
அத்துடன், கோவிட் தொற்றுநோயைத் தடுப்பதில் அரசாங்கத்தின் தோல்வி அணுகுமுறை காரணமாக சில மருத்துவ வல்லுநர்கள் தங்கள் பதவிகள் மற்றும் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதை ஒரு தேசியப் பணியாகக் கருதி, கட்சி அரசியலைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் ஒரு கூட்டுச் செயல் திட்டத்துடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
அரசாங்கம் அத்தகைய அணுகுமுறையைப் பின்பற்றத் தவறிவிட்டது மற்றும் அதன் தோல்வியை நிரூபித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஹந்துன்நெத்தி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை ஜேவிபி ஏற்பாடு செய்ததாகக் கூறியுள்ளார்.
தற்போதைய முடக்கல் நடைமுறையில் இல்லை என்று கூறிய அவர், அது சாதாரண மக்களின் வாழ்க்கையை மட்டுமே சீரழித்து விட்டது என்றும் கூறியுள்ளார்.