தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்டவே அரசு முயல்கிறது: சிவஞானம் சிறிதரன்
அனாதைகளாக உள்ள எங்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்று கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் (Sivaganam Sritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்களுடனான சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று பிற்பகல் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகமான பட்டினியை நோக்கி இந்த நாடு நகர போகிறது என்பதனை இந்த நாட்டினுடைய குடும்ப அரசியலில் அங்கத்தவராக இருக்கின்ற சமல் ராஜபக்ச (Chamal Rajapaksa) கூறியிருக்கிறார்.
நீங்கள் சோறு இல்லை என்றால் மரவள்ளிக்கிழங்கைச் சாப்பிடுங்கள் என்று கடந்த 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட வார்த்தைகளை, 70 ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை மீண்டும் அவர் நினைவூட்டி இருக்கிறார். ஆகவே எவ்வளவு தூரம் உலகம் வளர்ந்திருக்கிறது, நாகரீகம் வளர்ந்திருக்கிறது.
நாடுகளினுடைய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கின்ற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்டவே தொடர்ந்தும் முயல்கின்றது.
அரசியல் உரிமைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றோம். எங்களது உரிமைக்காகத் தொடர்ந்தும் நாங்கள் இந்த பேரினவாத அரசுடன் பல்வேறு வழிகளிலும் போராடி வருகிறோம்.
அனாதைகளாக விடப்பட்டிருக்கின்ற எமக்கான அரசியல் உரிமைக்கான போராட்டத்தில் நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் முன்னாள் வடக்கு மாகாண சபை
உறுப்பினர் குருகுலராஜா கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை
தவிசாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மகளிர்
அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri