மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் திருடர்களை பிடிக்க முடியாது – நீதி அமைச்சர்
மக்கள் எதிர்பார்க்கும் வேகத்தில் திருடர்களை பிடிக்க முடியாது என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
திருடர்களை பிடிப்பது தொடர்பில் மக்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்கு செல்ல முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினர் இந்த விடயத்தை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பீதியை உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்கள் மாதம் ஒரு தடவை ஓர் கண்காட்சியை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு நடைபெறாத காரணத்தினால் அவர்களது நம்பிக்கை இழக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆறு மாதங்களில் அனைத்தையும் செய்து விட முடியாது எனவும் அரசாங்கத்திற்கு ஐந்து ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது எனவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri