“மாற்றுவழியின்றி அடிபணிந்த கோட்டாபய அரசாங்கம்”
விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம் இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் அநேக விடயங்களை மேலே பாய்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பின்னர் அந்த விடயங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளும். இரசாயன உரப் பயன்பாடு தடை குறித்து நாம் முன்கூட்டியே கூறியிருந்தோம். இதனை செய்ய வேண்டாம் என்றோம்.
எனினும் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை. விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. இரசாயன உரம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த உரம் பற்றிய பொய்யான பிரச்சாரம் செய்து நடைமுறை ரீதியில் செய்ய முடியாதவற்றை அரசாங்கம் செய்ய முயற்சித்தது.
இரசாயன உர பயன்பாடு குறித்த தடையானது அரசாங்கத்தின் முட்டாள்தனத்தை பறைசாற்றிய மற்றுமொரு சந்தர்ப்பமாகும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

கோலிவுட் திரையுலகமே எதிர்பார்க்கும் விக்ரம் படத்தின் கதை இது தான் ! கொண்டாடப்போகும் ரசிகர்கள்.. Cineulagam

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022