விசேட அதிரடிப்படையினர் களமிறக்கம்! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்
வான்வழியாகவும் கடல் வழியாகவும் நாட்டிற்குள் போதைப்பொருள் வருவதைத் தடுக்க விசேட அதிரடிப்படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் நுழைவதை உடனடியாகத் தடுப்பது கடினம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு தேசிய செய்தித்தாளுக்கு அளித்த கலந்துரையாடலில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையினர்
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“போதைப்பொருள் நுழைவதை தடுக்க நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம்.
விசேட அதிரடிப்படையினர் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போதும் கூட கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
சட்டவிரோத போதைப்பொருட்கள்
கடந்த சில மாதங்களில் ஏராளமான சட்டவிரோத போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்குள் போதைப்பொருள் வருவதை உடனடியாக நிறுத்துவது கடினம்.
தற்போது போதைப்பொருள் கடத்தல் சமீபத்தில் நாட்டில் மிகவும் வலுவாக பரவியுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் எங்கள் கொள்கைகளை செயல்படுத்துகிறோம்’’ என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri