அரச ஊழியர்களின் டிசம்பர் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு
டிசம்பர் மாதத்தில் மொத்த அரச வருமானமாக இருந்தது 141 பில்லியன் ரூபாய்களாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
டிசம்பர் மாதத்தில் கிடைக்கப்பெற்ற மொத்த அரச வருமானத்தில், 88 பில்லியன் ரூபாய் அரச மற்றும் ஓய்வூதியக்காரர்களின் சம்பளத்திற்குச் செலவிடப்பட்டது. சமுர்த்திக்கு 30 பில்லியன். உரத்திற்கு 6.5 பில்லியன் செலவிடப்பட்டது.
அச்சிடப்பட்ட பணம்

அத்தியவசிய மருந்துகளுக்காக 8.7 பில்லியன் ரூபாயும், மீதமுள்ள தொடர் செலவினங்களுக்காக 21 பில்லியன் ரூபாயும் செலவிடப்பட்டது.
இவற்றுக்கு மட்டும் 154 பில்லியன் ரூபாய் செலவாகின்றது. ஆனால் 141 பில்லியன் ரூபா வருமானத்தால் இந்த செலவுகளை ஈடுகட்ட முடியாது.
இதுதவிர வாங்கிய கடனுக்கான வட்டி டிசம்பரில் 182 பில்லியன் செலுத்த வேண்டியிருந்தது. டிசம்பரில் இவற்றைச் செலுத்தியது பணத்தை அச்சிட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam