அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்காமல் அந்த சுமையை அரசு பொறுப்பேற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் பொது மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்று தொடர்ச்சியான பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான குற்றச்சாட்டு வெறும் அரசியல் ஆர்வமுள்ள ஒருவரால் சுமத்தப்படும் குற்றச்சாட்டாக கருதப்படுகின்றது.

அடுத்த ஆண்டிற்கான அரசின் செலவு
அடுத்த ஆண்டிற்கான அரசின் செலவு சுமார் ரூ. 7885 பில்லியன் ஆகும். அதில் 10 சதவீதம் சமூக நலத்துறைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகை கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான செலவினங்களை விட அதிகமாகும்.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு 1,000 பில்லியன் ரூபாவுக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது.
நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்ட 5.8 மில்லியன் குடும்பங்களில், சுமார் 3.4 மில்லியன் குடும்பங்கள் நலத்திட்ட உதவிகளைப் பெறும் நிலையில் உள்ளன.
எனவு தகுதியான குடும்பங்களைத் தேர்ந்தெடுக்கும்போது இந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட தொகை குறைக்கப்படும். இவற்றினை கருத்திற்கொண்டே இந்த வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri