தேசிய வளங்களை எந்த காரணம் கொண்டும் அரசாங்கம் விற்பனை செய்யாது! - காமினி லொக்குகே
கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை உண்மை என மின் வலு அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ததில் எந்த தவறும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலில் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளதை போல், சர்வதேச நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டிற்குள் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருக்கின்றது.எனினும் தேசிய வளங்களை எந்த காரணம் கொண்டு அரசாங்கம் விற்பனை செய்யாது எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டுள்ளார்.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டமை குறித்து கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri
தற்கொலை செய்துகொள்ளப்போகும் மயில், அதிர்ச்சியில் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரோமோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam