சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் சுசில் பிரேமஜயந்த வெளியிட்ட தகவல் - செய்திகளின் தொகுப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை.
எனினும், நடைமுறைப்படுத்த வேண்டியவற்றை சட்டத்தைக் கொண்டு வந்து அரசு நடைமுறைப்படுத்துமென சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்பும் வகையில் அனைவரும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அமைச்சர், பல்வேறு கருத்துகள் நிலவும் நிலையில் அது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியம் என்பது அமெரிக்காவின் ஒரு வங்கியல்ல. அவ்வாறு எண்ணிக்கொண்டே பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இது தொடர்பிலான விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
