தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை

Anura Kumara Dissanayaka Sajith Premadasa Economy of Sri Lanka National People's Power - NPP NPP Government
By Rakesh May 27, 2026 09:17 AM GMT
Report

 நாடு தற்போது பயங்கரமான பொருளாதார ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த உண்மையை மக்களுக்குத் தெரிவிக்காமல், தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு மக்களை ஏமாற்றி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று(26) சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள பல்லேகம தேரர் விவகாரம்! திரும்ப பெறப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு

டொலர் கையிருப்பு 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டில் பிரச்சினைகள் ஏதும் இல்லை என நாடகமாடும் அரசு, எப்போதுமே உண்மையை மறைத்துப் பொய்களைப் பரப்பிக்கொண்டே பால் மா மற்றும் எரிபொருள்களின் விலைகளைத் தொடர்ந்து கூட்டி வருகின்றது.

எரிபொருள் மற்றும் பால் மா விலைகளைத் திடீரெனக் கூட்டுவதற்கு நாட்டில் தற்போது மறைந்திருக்கும் கொடூரமான பொருளாதார ஆபத்தே முக்கிய காரணமாகும். உலக நிலையான பொருளாதாரக் கோட்பாட்டின்படி, ஒரு நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது குறைந்தது 3 மாத கால இறக்குமதி மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும்.

தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை | Government Deceiving People With False Statistics

ஜனாதிபதி கூறுவது போல் நாட்டில் 7 பில்லியன் டொலர் கையிருப்பு இருப்பதாக வைத்துக் கொண்டாலும், தற்போதைய சூழலில் மாதத்துக்கு 2 பில்லியன் டொலர் வீதம் 3 மாதங்களுக்கு 6 பில்லியன் டொலர் அத்தியாவசியத் தேவைக்கே செலவாகிவிடும்.

தற்போது ரூபாவின் மதிப்பிழப்பு மற்றும் எரிபொருள் விலை உயர்வால் இந்த எஞ்சிய கையிருப்பும் மிக வேகமாக உருகி வருகின்றது.

அரசு கூறும் 7 பில்லியனில், 1.2 பில்லியன் டொலர் சீன யுவான் வடிவில் காணப்படுகின்றது. அதனை எம்மால் தற்போதைய தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது.

யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை விரைவில் நடவடிக்கை

யாழ்.உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை விரைவில் நடவடிக்கை

பொருளாதார நெருக்கடி

எனவே, எம்மால் பயன்படுத்தக்கூடிய உண்மையான கையிருப்பு 5.8 பில்லியன் டொலர்கள் மாத்திரமே. 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது 95 ரக பெற்றோலின் விலை 470 ரூபாவாகக் காணப்பட்டது.

இன்று அதன் விலை 410 ரூபாவாக உள்ளது. உலகச் சந்தை நிலவரப்படி இந்த மதிப்பு இன்னும் அதிகரித்தால், நாடு மிக விரைவில் மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்வது உறுதி அண்மைக் காலமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் அந்நியச் செலாவணி பரிமாற்றங்கள் அதிகரித்து காணப்பட்டாலும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் அங்குள்ள இலங்கையர்களுக்குத் தொழில் இழப்புகள் ஏற்பட்டு, அந்த வருவாயும் சட்டெனக் குறையும் அபாயம் எழுந்துள்ளது.

தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை | Government Deceiving People With False Statistics

எதிர்வரும் 2028ஆம் ஆண்டு நாடு மிக மோசமான நிலையை அடையும். 2027 மார்ச் மாதத்துடன் தற்போதைய ஐ.எம்.எவ். இணக்கப்பாடு முடிவுக்கு வரும் வேளையில், நாட்டுக்குக் கிடைக்கும் நிலைப்படுத்தும் ஆற்றல் நீங்கிவிடும்.

2028ஆம் ஆண்டு முதல் நமது வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் தொகை 1.5 பில்லியனிலிருந்து 3.5 பில்லியன் டொலர் வரை பாரியளவில் அதிகரிக்கும். நாட்டின் கையிருப்பு 13.4 பில்லியன் அல்லது 14 பில்லியன் டொலராக இருக்க வேண்டும் என ஐ.எம்.எவ். கூறியுள்ளது.

மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது அரசு! மொட்டுக் கட்சி பதிலடி

மாகாண சபைத் தேர்தலுக்கு அஞ்சுகின்றது அரசு! மொட்டுக் கட்சி பதிலடி

முக்கிய வாக்குறுதிகள்

ஆனால், தற்போது அதில் 50 வீதம் மாத்திரமே நம் வசம் உள்ளது. இந்த இலக்கை அடைய மாதந்தோறும் 600 மில்லியன் டொலர்களை நாம் ஈட்ட வேண்டும்.

ஆனால், தற்போதைய அரசு மாதத்துக்கு வெறும் 60 மில்லியன் டொலர்களை மாத்திரமே தேடி வருகின்றது.

தவறான புள்ளிவிவரங்களால் மக்களை ஏமாற்றும் அரசு! எதிர்க்கட்சித் தலைவர் எச்சரிக்கை | Government Deceiving People With False Statistics

எனவே, நிலைமை கையை மீறிச் செல்வதற்கு முன்பாகவே, தற்போதிருந்தே அடுத்த கட்ட ஐ.எம்.எவ். இணக்கப்பாட்டை நோக்கி நகர்ந்து, மக்களுக்கு அழுத்தம் குறைந்த மாற்று உடன்படிக்கையை நோக்கிச் செல்ல அரசு முற்பட வேண்டும். தற்போதைய அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களுக்கு வழங்கிய முக்கிய வாக்குறுதிகளை அடியோடு மறந்துவிட்டது.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் அடக்க விலையிலேயே மக்களுக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஆனால் இன்று வரை அது நடக்கவில்லை. மின்சாரக் கட்டணத்தை உடனடியாக 33 வீதத்தால் குறைப்போம் என்று மேடைகளில் முழங்கினார்கள்.

அதுவும் செய்யப்படவில்லை. விவசாயிகளுக்குத் தேவையான தரமான உரங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அரசு இன்று நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளையும் நடுத்தெருவில் கைவிட்டுவிட்டது" என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US