விவசாயிகளை வைத்து பிழைப்பு நடத்தும் சஜித் அணி: அரசு குற்றச்சாட்டு
விவசாயிகளைத் தூண்டிவிட்டு, அவர்களை வீதியில் இறக்கி அதன்மூலம் அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றது ஐக்கிய மக்கள் சக்தி என்று குற்றஞ்சாட்டியுள்ளார் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ(Arunthika Fernando).
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"இரசாயன உரப் பயன்பாட்டை கைவிட்டு, சேதன பசளை மூலமான விவசாயத்தை நோக்கி உலக நாடுகள் பயணிக்கின்றன. இரசாயன உரம் என்பது நஞ்சு. எமது மக்களைக் காக்க நாமும் இயற்கை விவசாயத்தை நோக்கி நகர்கின்றோம். அதற்காகவே உர இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டது.
விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நிலைமை இவ்வாறிருக்கையில் விவசாயிகளைத் தூண்டிவிட்டு ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் அவர்களின் போராட்டங்கள் ஊடாகவும் அரசியல் செய்கின்றது.
மேற்படி கட்சிகளும் இரசாயன உரத்துக்கு எதிர்ப்பு. ஆனால், எதற்காக தற்போது
இரசாயன உரத்துக்கு குரல் கொடுக்கின்றனர் எனத் தெரியவில்லை" - என்றார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri