ஒட்டுமொத்த நாட்டையும் ஏமாற்றிய அரசாங்கம்! ஜே.வி.யின் முக்கிய தேரர் விமர்சனம்
புளுகுமூட்டைகளால் ஒட்டுமொத்த நாட்டையும் ஏமாற்றி, தங்கள் கட்சிக்கார்களின் மனதில் பகைமையுணர்ச்சியை வளர்த்த ஒரு கும்பலே தற்போதைக்கு ஆட்சியில் இருப்பதாக கெக்கிராவ சுதர்ஸன தேரர் விமர்சித்துள்ளார்.
ஜே.வி.பி. எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும், கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராகவும் செயற்பட்ட கெக்கிராவ சுதஸ்ஸன தேரர், தற்போது ஆளுங்கட்சிக்கு எதிரான மனோநிலைக்கு மாறி அரசாங்கத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளார்.
தேரர் விமர்சனம்
அதன் ஒரு அங்கமாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிலேயே மேற்கண்டவாறு ஆளுங்கட்சியை அவர் விமர்சித்துள்ளார்.
குறித்த பதிவில், கடந்த காலத்தில் இந்த அரசின் முக்கியஸ்தர்கள் புளுகுமூட்டைகளால் ஒட்டுமொத்த நாட்டையும் ஏமாற்றினார்கள். தங்கள் கட்சிக்காரர்களின் மனங்களில் பகைமை உணர்ச்சியை விதைத்தார்கள். அவ்வாறு செய்தே அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.
இந்த ஆட்சியாளர்களின் பாவங்களுக்கு இனியும் துணை போக முடியாது. அதன் காரணமாகவே நான் விலகி நிற்க தீர்மானித்தேன். ஆயினும் இவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர பாடுபட்டதன் பலனை தற்போது அவர்களின் கட்சிக்காரர்களின் வசைபாடல் ஊடாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன்.
இவர்கள் போலியான புத்திஜீவிகள். அறிவு குறைந்தவர்கள். இனி எந்தவொரு கட்டத்திலும் இவர்களின் சார்பாக நான் எந்தவொரு கருத்தும் வெளியிட மாட்டேன் என்றும் கெக்கிராவ சுதஸ்ஸன தேரர் பதிவிட்டுள்ளார்.





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
