மாகாண சபைகளை எதிர்க்கின்றேன் - அரசாங்கம் தேர்தலை நடத்தினால் அதனை எதிர்க்க முடியாது! - சரத் வீரசேகர
மாகாண சபை முறையை தாம் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருவதாகவும் எனினும் அரசாங்கம் என்ற வகையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், தன்னால் அதனை எதிர்க்க முடியாது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மாகாண சபைகளை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறேன். தற்போதும் எதிர்க்கின்றேன். எதிர்காலத்திலும் எதிர்ப்பேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், அது அரசாங்கம் செய்யும் நடவடிக்கை. அரசாங்கம் செய்வதை தனி நபரால் எதிர்க்க முடியாது. எனினும் எனது நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
மாகாண சபைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நான் இருக்கின்றேன். இது எனது தனிப்பட்ட நிலைப்பாடு. ஒரு நாடு ஒரு சட்டம் என்றால், ஒன்பது மாகாணங்களில் ஒன்பது சட்டங்கள் இருக்க முடியாது.
தனிமைப்பட்ட நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் நாங்கள் கூட்டாக எடுக்கும் தீர்மானங்கள் இருக்கின்றன. நாங்கள் அப்போது பார்த்துக்கொள்வோம். எப்போது, எப்படி மாகாண சபைத் தேர்தல் நடக்கும் என்ற தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan