விபத்தில் சிக்கிய அரச பேருந்து: 75 பேரின் உயிரை சாமர்த்தியமாக காப்பாற்றிய சாரதி
பதுளை - ஸ்பிரிங்வெளி வீதியில் வீரியபுர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அரச பேருந்து ஒன்றின் பின்பகுதியில் உள்ள சக்கரம் ஒன்று கழன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது பேருந்தின் சாரதி சாமர்த்தியமாக செயற்பட்டு பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்குள்ளான பேருந்தில் சுமார் 75 பேர் வரை பயணித்துள்ளதாகவும் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இன்று (22 ஆம் திகதி) ஸ்பிரின்வலி பத்தேகமவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாரதியின் சாமர்த்தியத்தால் பேருந்து நடுரோட்டில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக பதுளை டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
