நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம்
ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த ( K. D. Lalkantha) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை..
அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்முதல் செய்யும் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் அதே வேளையில், சந்தையில் அரிசியின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri