நெல்லுக்கான நிர்ணய விலையை அறிவித்த அரசாங்கம்
ஒரு கிலோ நெல்லுக்கு வழங்கப்படும் விலைகளை அரசாங்கம் இன்று (05) நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் அறிவித்துள்ளது.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த ( K. D. Lalkantha) இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை..
அதற்கமைய, நாடு நெல் கிலோவொன்று 120 ரூபாவுக்கும், சம்பா நெல் கிலோவொன்று 125 ரூபாவுக்கும், கீரி சம்பா நெல் கிலோவொன்று 132 ரூபாவுக்கும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாயிகளிடமிருந்து உலர்ந்த நெல்லை மட்டுமே அரசாங்கம் கொள்முதல் செய்யும் என்று விவசாய அமைச்சர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் அதே வேளையில், சந்தையில் அரிசியின் நிலைத்தன்மையைப் பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri