இன்று முதல் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு

Parliament of Sri Lanka Dinesh Gunawardena Sri Lanka Sri Lankan Peoples
By Mayuri Jun 29, 2023 04:24 AM GMT
Report

முன்னெப்போதும் இல்லாத வகையில் நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மற்றும் தனியார் வங்கிகளும் எந்த நெருக்கடியும் இல்லை மற்றும் வலுவாக இயங்குகின்றன. எனவே, இந்த நாட்டின் வாடிக்கையாளர் சமூகம் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க அறிவித்துள்ளார். 


ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக பிரதமரும், அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற வேலைத்திட்டத்திற்கு கால அவகாசம் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்த விடுமுறையை அறிவித்ததாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.

அதேநேரம், வார இறுதியில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று முதல் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Government And Private Baniks In Sri Lanka

ஐந்து நாள் வங்கி விடுமுறையின் இரண்டு நாட்களில், 140,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களை ஏலம் விடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கம் இந்த விடயங்களை தெரிவித்துள்ளது. 

ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ள விடயம்

இன்று முதல் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Government And Private Baniks In Sri Lanka

இதன்போது ரஞ்சன் சேனாநாயக்க மேலும் தெரிவிக்கையில், இந்த ஐந்து நாள் விடுமுறையில் நாடாளுமன்றம் என்ன செய்யப்போகிறது. இதன் ஊடாக வங்கிகள் மற்றும் வங்கி வைப்பாளர்கள் மற்றும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இதன் மூலம் நாட்டின் உள்நாட்டுக் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கை இவ்வாறுதான் மேற்கொள்ளப்படுகிறது என்ற உண்மையை தெளிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

உள்ளூர் கடன் மேம்படுத்தல்களை மேற்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. கடன் வைத்திருப்பவர்களுக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறையை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக பிரதமரால் மற்றும் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பில் ஏதேனும் நியாயம் இருக்குமானால், தொடர்ந்து ஐந்து நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்து நாட்டில் சில குழப்பங்களை ஏற்படுத்தி அந்த நியாயத்தை அரசாங்கமே சந்தேகமாக மாற்றியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Government And Private Baniks In Sri Lanka

சன்ன திஸாநாயக்க கூறும் விடயம்

இந்த நிலையில் சன்ன திஸாநாயக்க கூறுகையில், உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பது சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரை அல்ல. கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் தொடர்ந்தும் கூறுகின்ற போதிலும் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பது வங்கி ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரியாது.

உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்திற்கு உடன்பாடு இல்லை. எவ்வித அடிப்படையும் இன்றி நீண்ட வங்கி விடுமுறைகளை வழங்குவது சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.

பங்குச் சந்தையை மூடுவதன் மூலம் அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என அனைத்துத் தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் நாட்டின் அரச மற்றும் தனியார் வங்கிகள் எவ்வித பிரச்சினையுமின்றி இயங்கும் என வாடிக்கையாளர்களுக்கு அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த நாட்டின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நாங்கள் கூற விரும்புகிறோம், இந்த நாட்டில் உள்ள அனைத்து மற்றும் தனியார் வங்கிகளும் எந்த நெருக்கடியும் இல்லை மற்றும் வலுவாக இயங்குகின்றன. எனவே, இந்த நாட்டின் வாடிக்கையாளர் சமூகம் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம்.

இன்று முதல் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு | Government And Private Baniks In Sri Lanka

ஆனால், அந்த வாடிக்கையாளர்கள், அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணத்தை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்திருப்பதை, நாங்கள் அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துகின்றோம்.

அந்த வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், இந்த கடன் மேமபடுத்தலுக்கு முன் அந்த இழப்பை அரசாங்கம் எவ்வாறு ஈடு செய்யும் என்பது குறித்த உத்தரவாதத்தை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும் உள்நாட்டுக் கடனை மறுசீரமைப்பதன் மூலம் ஊழியர் சேமலாப நிதி உட்பட எந்தவொரு பொதுநிதியின் அங்கத்துவ இருப்புநிலையும் பாதிக்கப்படாது எனவும், கடந்த காலங்களில் செலுத்தப்பட்ட ஓய்வுக்கால நிதிப் பலன்களின் விகிதத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு இந்த நாட்டில் உள்ள வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மையையோ அல்லது எந்தவொரு அரச அல்லது தனியார் வங்கியின் ஸ்திரத்தன்மையையோ பாதிக்காது என, ஜூன் 27ஆம் திகதி கம்பஹா மாவட்டச் செயலாளரின் நிர்வாக வளாகமான 'லக்சியன மந்திரய'வை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், ஆனைக்கோட்டை

27 Apr, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

18 Apr, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், London, United Kingdom

26 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

11 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Nienburg, Germany

24 Apr, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Villeneuve-Saint-Georges, France

26 Apr, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், இணுவில், கொழும்பு, Markham, Canada

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

25 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில், London, United Kingdom

25 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், கனடா, Canada

25 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
மரண அறிவித்தல்

நீர்வேலி, Aurora, Canada

24 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மொரட்டுவா

23 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, கொழும்பு

06 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Idar-Oberstein, Germany

21 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, மன்னார், Toronto, Canada

22 Apr, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, London, United Kingdom

18 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom, கிளிநொச்சி, கொழும்பு

21 Apr, 2025
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய் வடக்கு, New Jersey, United States

19 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Aulnay-sous-Bois, France

23 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US