ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு விசேட உயரடுக்கு பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், மதிப்பீட்டின் பின்னர் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் பொது பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை மேற்பார்வையிடுவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் விசேட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது.
இந்த குழு எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய, வேட்பாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam