கோட்டாவுக்காக, தமிழ் மக்களின் அபிலாசைகளை ஒதுக்கிவைக்கமுடியாது. நாடாளுமன்றில் தெரிவிப்பு! (Video)
தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிப்பதே தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கொள்கைகளாகும்
எனவே அதனை ஒதுக்கி வைத்து விட்டு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய கோரியமை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார்
தமிழினத்தின் கொள்கைகளுக்கான பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலிகொடுக்கப்பட்டுள்ளன.
போர் முடிவடைந்து சமாதானம் கொண்டு வரப்பட்டதாக ஜனாதிபதி கூறியதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.