தளராப்பிடியை தளர்த்திய இலங்கை அரசாங்கம்: சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை ஆரம்பித்தது
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் உயரதிகாரியை நேற்று சந்தித்துள்ளார்.
இரண்டு தரப்புக்களை கோடிட்டு ரொயட்டர் இதனை தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ, அமைச்சர் பசி;ல் ராஜபக்சவையும், திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்,ஆட்டகலவையும் சந்தித்துள்ளார்.
இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிந்திய மீளாய்வு பற்றி இரண்டு தரப்புக்களும் ஆராய்ந்துள்ளன.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் எதிர்வரும் ஏப்ரலில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை ஆரம்பித்து இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரதன்மையை பேண இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில் சர்வதேச நாணய நிதியத்தின் உயர் பிரதிநிதி இன்று ஜனாதிபதி கோட்டாபயவை சந்திக்கிறார்.
ஏற்கனவே அமெரிக்கா உட்பட்ட வெளிநாடுகளும் இலங்கையின் பல தரப்பினரும் வலியுறுத்தியபோதும், சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப்போவதில்லை என்று இலங்கை அரசாங்கம் விடாப்பிடிக்கொள்கையை கொண்டிருந்தது.
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri