கோட்டா போனால், மஹிந்த முதலாளி, பசில் பிரதமர்! இது தேவையா....(யதார்த்த கேலி அரசியல்)
கோட்டா மாமாவின் வீட்டுக்கு முன் சென்று “கோட்டா கோ ஹோம்” என்று சொல்வதில் அர்த்தமில்லை என்று ஆங்கிர வார இதழ் ஒன்றில் அரசியல் நகைச்சுவை பத்தியில் கூறப்பட்டுள்ளது.
அன்புள்ள குடிமக்களே, 'தனியாக செல்லுங்கள் ஆனால் ஒன்றாக போராட்டம் செய்யுங்கள்' என்ற பழைய முழக்கம் இனி பயனளிக்காது. “எங்களுக்கு உரிய அரசாங்கம் கிடைக்கவில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றபடியால், ஒன்றாக அணிவகுத்து, ஒன்றாக போராடட்டம் செய்ய வேண்டிய நேரம் இது என்று அந்த பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்பான குடிமக்களே, இன்று மற்றொரு போராட்டம் நடத்தப்பட்டுகிறது.
அப்படியானால், அது அமைதியாக நடப்பதையும், அதிகாரத்தில் இருப்பவர்கள் உங்களைக் குற்றம் சொல்ல வாய்ப்பளிக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த போராட்டம் தெளிவான ஆனால் பயனுள்ள செய்தியை அனுப்ப வேண்டும். இந்தநிலையில் கோட்டா மாமா வீட்டுக்கு அருகில் சென்று, ‘கோட்டா, வீட்டுக்குப் போ’ என்று சொல்வதில் அர்த்தமில்லை
இரண்டு கிளர்ச்சிகள், 30 ஆண்டுகாலப் போர், ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்தாலும், இதுவரை நாம் பார்த்திராத பெரும் நெருக்கடியான நேரத்தில், ஆழ்ந்த சோகத்துடனும், பெரும் நெருக்கடியான காலக்கட்டத்திலும் இலங்கை மக்கள் இருக்கின்றனர்.
மின்வெட்டு, பொருட்கள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு என அன்றாட வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதித்து இன்று நாம் இருக்கும் அவல நிலைக்கு பயங்கரவாதத்தின் கோரப்பிடியில் இருந்து நம்மைக் காப்பாற்றியவர்கள்தான் காரணம் என்பது நகைப்புக்குரியது.
அரசியல் கட்சிகளின் தூண்டுதலின்றி, எங்களை ஆள்பவர்களுக்கு எதிராக உங்கள் கோபத்தை வெளிப்படுத்த தெருக்களில் இறங்குகிறீர்கள்.
மின்சாரம், எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் உங்கள் வாழ்க்கை கணிசமான அளவில் பாதிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.
பல நிபுணர்கள் இந்த நெருக்கடி வருவதைக் கண்டனர்.
நம்மை ஆள்பவர்களை எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.
எனினும் பணத்தை அச்சடிப்பதால் பணவீக்கம் ஏற்படாது என்று கூறிய மத்திய வங்கி ஆளுநரை நாங்கள் இன்னும் வைத்துள்ளோம்.
கப்ராலை விட மகேந்திரன் இருந்திருந்தால் நன்றாக இருந்திருப்போமா? என்று மக்கள் இப்போது நினைக்கிறார்கள்.
‘வரிசையில்’ மக்கள் இறப்பதை விட “கப்புடாக்கள்”; காகங்கள் விமானத்தில் அடிபடுவதைப் பற்றி அதிகம் பேசும் நிதியமைச்சரும் நம்மிடம் இருக்கிறார்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் வாழும் நினைவாக இருந்தாலும் பசில் மாமா அமைதியாக இருக்கிறார்.
மல்வானையில் உள்ள அந்த வீட்டைப் போல, நிதியமைச்சும் தன்னுடையது அல்ல என்று அவர் ஒரு நாள் சொல்லக்கூடும்;
நீங்கள் கோட்டா மாமாவை முதன்மைப் பணிக்குத் தேர்ந்தெடுத்தபோது அவர் ‘வெட கரண அபே விருவா’, எங்களுக்காக உழைக்கும் எங்கள் ஹீரோ என்றீர்கள்.
இப்போது, ‘அபி தமா ஹொன்தட்ட கெருவே’, தாமே சிறப்பாக செய்துவிட்டதாகவும்;, இந்த நெருக்கடியை உருவாக்கவில்லை என்றும் கூறுகிறார்.
இந்தநிலையில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில், அவர் இப்போது ‘ஹொன்தட்டம வெடி கரணா அபே விருவா’ (சிறப்பாக அதிகரிக்கும் எங்கள் வீரராக) மாறியுள்ளார்.
இதற்கு முன்னரும் நம் மத்தியில் செல்வாக்கற்ற தலைவர்கள் இருந்தனர்.
1970களின் பிற்பகுதியில், மக்கள் எதிர்கொண்ட கஸ்டங்கள் காரணமாக, ஸ்ரீமாவோ விமர்சிக்கப்பட்டார் ஜே.ஆரின் ஆட்சியின் இறுதியில் ‘ஜே.ஆர் மரமு’(ஜே ஆரை கொல்வோம்) என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
பிரேமே கொல்லப்பட்டபோது சிலர் ‘கிரிபத்”(பாற்சோறு) சாப்பிட்டனர்.
எனினும் யாரும் ரொஸ்மீட் பிளேஸ், வோர்ட் பிளேஸ் அல்லது சுச்சரிதவை தாக்கவில்லை.
கடந்த வியாழன் அன்று மிரிஹானவில் நாம் பார்த்த போராட்டத்தில் எந்த அரசியல் கட்சியும் தலையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இதை ‘தீவிரவாதிகளின்’ வேலை என்று அழைப்பதை வைத்து பார்க்கின்றபோது நமது ஆட்சியாளர்கள் எவ்வளவு அருமையாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.
அதனால்தான் அவர்கள் மிகவும் வெறுக்கப்படுகிறார்கள்.
எங்கள் இக்கட்டான நிலைக்கு இப்போது ஆட்சியில் இருப்பவர்களைக் குறை கூற வேண்டும்,
அன்பான குடிமக்களே, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
வன்முறையற்ற போராட்டங்கள் தேவை,
எனினும். மிரிஹனவில் நடந்ததை போன்ற எதிர்ப்புகள், அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்னும் எதேச்சதிகாரமாக மாறுவதற்கு ஒரு சாக்காகப் அவற்றை பயன்படுத்தப்படலாம் என்பதை நமக்குக் காட்டுகிறது.
அன்பான குடிமக்களே, நீங்கள் உங்கள் கோபத்தை ஆட்சியாளர்கள் மீது காட்டினாலும், ஆட்சியாளர்களை எதிர்ப்பவர்கள்; தெளிவான பாதையை உங்களுக்கு காட்டவில்லை.
அவர்கள் வெவ்வேறு திசைகளில் இழுக்கிறார்கள்.
இளைஞர் சஜித் ஜனாதிபதி தேர்தலை விரும்புகிறார். அநுர சகோதரர் தமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என விரும்புகின்றார்.
அவருடைய திட்டம் என்ன என்பதை அவர் தெளிவாகச் சொல்லவில்லை
70 ஆண்டுகளாக நம்மை முட்டாளாக்கிய பச்சை மற்றும் நீலம் பற்றி நாங்கள் புலம்புகிறோம்.
சிறிசேனாவுக்கு பதிலாக நந்தசேன கிடைத்ததால் எங்களுக்கு நடந்ததை பாருங்கள்!
குடிமக்களே, 'சிஸ்டம்' மாற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைத் தெரியப்படுத்த இதுவே சிறந்த நேரம்,
ஏனென்றால் 'சேன' 'தாச' அல்லது 'நாயக' “பக்ச” அல்லது 'சிங்க' என்று ஆட்களை மாற்றுவது பெரிய பலனைத் தராது.
முக்கால் நூற்றாண்டாக அதைத்தான் செய்து வருகிறோம்,
எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள். ‘கோ கோட்டா கோ’ என்ற கோசம் சொல்வது எளிது என்பது நன்றாகத் தெரிகிறது.
ஆனால் இந்தப் போரில், உங்கள் பாடசாலை விளையாட்டு அணியை உற்சாகப்படுத்தவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கோட்டா மாமா போனால், அரசியலமைப்பின் படி, மஹிந்த மாமே முதலாளியாவார். பசில் மாமா பிரதமராவார்.
இது இப்போது உண்மையில் வேண்டுமா?
‘விருப்புரிமை’ வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தல் அமைப்பின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள்; எவ்வளவு ஊழல் செய்தாலும், அவர்கள் தங்களுக்கு ஒரு ‘பெயரை’ ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் நிரந்தரமாக நாடாளுமன்றத்தில் இருக்க முடியும்
நீங்கள் இப்போது இருக்கும் குழப்பத்தில் இருந்து வெளியேற வேண்டுமானால், சொர்க்கத்தில் மாற்றம் தேவை. ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாங்கள் செய்யும் செயலுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஐயோ சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மறந்துவிட்ட வாக்குறுதியையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
அன்புள்ள சொர்க்கக் குடிமக்களே, இதையெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் நடத்தும் போராட்டங்களும், நீங்கள் காட்டும் கோபமும், அதிகாரத்தால் கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு, இந்த வழியில் செல்ல முடியாது, அவர்களின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை ஒரு முக்கியமான செய்தியை அனுப்பவேண்டும்.
எனவே, உங்கள் எதிர்ப்புகள் தொடர வேண்டும், ஆனால் இன்னும் பயனுள்ள வகையில் இருக்கவேண்டும் என்று குறித்த அரசியல் நகைச்சுவை பத்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விபத்து... லண்டன் தாயார் ஒருவரின் இறுதி ஆசை: அனாதையான இரண்டு பெண் பிள்ளைகள் News Lankasri
