கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Udaya Gammanpila
By Dharu Feb 04, 2025 12:47 AM GMT
Report

கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் குறிவைக்கப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்காரணமாக கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதற்கான சாத்திப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு புதிய "தலைமை சூத்திரதாரி"யை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை

ரமழான் காலத்தில் விசேட விடுமுறை

பிரதான சூத்திரதாரி

அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த கம்மன்பில, நிர்வாகத்தில் உள்ள சில நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களைத் தவறாக வழிநடத்த ஒரு மாற்றுக் கதை உருவாக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

உண்மையிலேயே பொறுப்பானவர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய பிரதான சூத்திரதாரியை உருவாக்குவதற்கான திட்டத்தில் அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு நன்மை பயக்கும் வகையில் இலங்கையின் புலனாய்வுப் பிரிவு ஈடர் குண்டுவெடிப்புகளைச் செய்தது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்.

உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர், விமானப்படையின் முன்னாள் தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் உள்ளிட்ட மூவர் கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்!

வெயங்கொடையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள அழுகிய நிலையிலுள்ள உணவுப் பொருட்கள்!

புலனாய்வு அமைப்பு

இலங்கையின் புலனாய்வு அமைப்புகளைக் குண்டு தாக்குதல்களுடன் இணைக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த சேனல் 4 ஆவணப்படம் செய்த குற்றச்சாட்டுகளை அந்த குழு நிராகரித்தது.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

அரசாங்கம் அறிக்கையைப் புறக்கணித்து தவறான கதையை முன்வைக்கின்றது.

முக்கிய சாட்சி

குறிப்பாக அரசாங்க சதித்திட்டத்தில் முக்கிய சாட்சியாகக் கூறப்படும் அசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள மோசடி உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

மேலும், மௌலானாவின் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கட்டுப்படுத்துவதோடு புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறப்படுகிறது.

சுரேஷ் சலேவை கைது செய்ய, மௌலானாவிடம் இருந்து ஒரு வாக்குமூலம் தேவை. ஆனால் பயணத் தடை இருக்கும் வரை, மௌலானா இலங்கைக்கு வந்து அறிக்கை அளிக்க முடியாது.

ஏனெனில் பயணத் தடை உள்ள ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழையும்போது கைது செய்யப்படுவார். எனவே, பயணத் தடையை நீக்கி, மௌலானாவை இலங்கைக்கு அழைத்து வந்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 127 இன் கீழ் வாக்குமூலம் அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

போலி திருமணச் சான்றிதழைத் தயாரிக்க மௌலானாவுக்கு உதவிய அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ளார்.

எனவே, மௌலானா மீதான பயணத் தடையை நீக்க பொலிஸ்தரப்பு அனுமதிக்க முடியாது. இந்த சூழ்நிலையில், மௌலானாவின் வழக்கறிஞர் பயணத் தடையை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை எதிர்க்க வேண்டாம் என்று சாய்ந்தமருது பொலிஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உயர் பொலிஸ் அதிகாரி

எனக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கறிஞர் அம்பாறை பகுதியில் உள்ள ஒரு உயர் பொலிஸ் அதிகாரியால் பணியமர்த்தப்படுகிறார்.

கோட்டாபய கைது செய்யப்படுவார்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை | Gotabaya Will Be Arrested

அந்த அதிகாரியின் பெயர் என்னிடம் இருந்தாலும், அதை ஆதரிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் அவரது பெயரை நான் குறிப்பிட மாட்டேன்.

அதன்படி, ஜனவரி 21 அன்று, மௌலானா மீதான பயணத் தடை பொலிஸாரிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் இல்லாமல் நீக்கப்பட்டது.

பொலிஸ் அதிகாரிகளின் சட்டவிரோத நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று அஞ்சி, பிள்ளையானின் செல்வாக்கின் கீழ் அவர் பொலிஸில் புகார் அளித்தார்.

அவரது இரண்டாவது மனைவி பாத்திமா ஜெஸ்லி பெனாசிரிடமிருந்து வாக்குமூலம் பெற பொலிஸார் முயன்றனர், ஆனால் பாத்திமா முதலில் மறுத்துவிட்டார்.

எனினும் பின்னர் பாத்திமாவிடமிருந்து ஒரு வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, அதை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (DCDB) சேமித்து வைத்தனர்.

இதற்கமைய தாக்குதல்கள் குறித்து ஏதேனும் போலி விசாரணையை மேற்கொள்ளுங்கள். ஆனால், மௌலானாவுக்கு எதிரான பிற குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளைத் தடுத்ததற்காக பழிவாங்கும் விதமாக, அவர் விரும்பியதைப் செய்ய அரசாங்கம் முயற்சித்தால், அது தவறு. நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். என சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலதிக தகவல் - இந்திரஜித்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US