அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுத்த கோட்டாபய! அந்த நபரை நிராகரித்த மகிந்த
பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுத்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக முன்னிறுத்தப்பட வேண்டிய ஒருவர் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மறுப்பு வெளியிட்ட மகிந்த
இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக பெரும்பங்கு ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.
எனினும் இந்த உறுப்பினர் குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்த போது அதனை அவர் மறுத்ததாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பேசுவதற்கு இது பொருத்தமான நேரம் அல்ல என்றும், கோட்டாபய தெரிந்தெடுத்த அந்த நபரை வேட்பாளராக குறிப்பிட முடியாது என்றும் மகிந்த தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.