இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு 10 நாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் உள்ள பல சமூக ஆர்வலர் அமைப்புகளின் அழைப்பின் பேரில் இந்த விஜயம் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ஷ, பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவராக சட்டத்தரணி ஜே.எம். ஜனக பிரியந்த பண்டார செயற்படுகின்றார்.
இவர் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவின் சகோதரராவார்.
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam