கோட்டாபய சிறை செல்ல தயாராக வேண்டும்..!! அரச தரப்பில் இருந்து வெளிவந்த அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ அல்லது சுரேஷ் சலேவோ, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் சிறைச் செல்ல தயாராக வேண்டும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தங்கத்தை கொண்டு வந்த விமானிக்கு நேர்ந்த கொடூரம்! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்..
சலேவின் உயிருக்கு ஆபத்தா.. சிக்குவாரா கோட்டாபய
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அது சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாராக இருதாலும் சட்டம் பொதுவானதே.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கைது செய்யப்பட்டமை மற்றும் அவரிடம் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் அனைத்தும் சட்டப்பூர்வமானவை.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னை கைது செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளில் தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்டத்துக்கு முன் எந்த நிபந்தனைகளும் கிடையாது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் தங்களின் நிரபராதித் தன்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர்கள் அனைவரும் சிறைக்கு செல்லத் தயாராக இருக்க வேண்டும்.
மேலும் சுரேஷ் சலேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அவருக்கு ஆதரவாக பேசுபவர்கள் உண்மையில் சலே மீதான அக்கறையில் பேசவில்லை.

தங்களுக்கு எதிராக வரவிருக்கும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தங்களை பாதுகாத்துத் கொள்ளவும் சுரேஷ் சலேவை ஒரு பகடையாக பயன்படுத்தவே முயற்சிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது வெறும் மதவாதம் அல்லது பயங்கரவாதத்தைக் கடந்து அரசியல் மற்றும் அதிகாரத் தேவைகளுக்காக அரங்கேற்றப்பட்ட ஒன்று என தற்போது சமூகத்திலும் சட்டத் துறையிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதற்கான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்ட ரீதியான ஏற்பாடுகள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
ரொனால்டோவுக்கு அதிர்ச்சி கொடுத்த டிஆர் காங்கோ: ஃபிபா உலகக்கிண்ணத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri