ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய கோட்டாபய! விண்ணதிரும் கோஷங்களுடன் காலிமுகத்திடலில் கொண்டாட்டம்
ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்ததினை தொடர்ந்து காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டக்களத்தில் விண்ணதிரும் கோஷங்களுடன் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக வெளியான அறிவிப்பினை தொடர்ந்து பல பகுதிகளில் மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில்,மேல் மாகாணத்தில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் தென்னம் மட்டைகளில் பட்டாசு சத்தங்களை எழுப்பி வித்தியாசமாக முறையில் மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய! சற்று முன்னர் வெளியான தகவல் |