கோட்டாபயவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கோட்டாபயவின் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணை

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.
குறித்த பணம் தொடர்பில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்ட பணம் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
ஜாமினில் வெளியே வந்தாலும் மயில் குடும்பத்தினர் பாண்டியனுக்கு கொடுக்கப்போகும் அடுத்த அதிர்ச்சி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam