கோட்டாபயவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
கோட்டாபயவின் வீட்டில் நடத்தப்பட்ட விசாரணை

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.
குறித்த பணம் தொடர்பில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மேலும் போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்ட பணம் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri