ரத்ன தேரரின் வழக்கில் சிக்கப்போகும் கோட்டாபய - தேசபந்து
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரரின் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அபே ஜனபல கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையை பலவந்தமாக பெற்றுக் கொண்ட வழக்கொன்றை அதுரலியே ரத்ன தேரர் தற்போதைக்கு எதிர்கொண்டுள்ளார்.
குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடந்த 2020ம் ஆண்டில் கடத்திச் சென்று கட்டாய ஒப்புதல் பெற்று குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அதுரலியே ரத்ன தேரர் தன்னைத் தானே நியமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தடுக்கப்பட்ட விசாரணை
இந்நிலையில் சம்பவம் குறித்து வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் அப்போதைக்கு மேற்கொண்ட முறைப்பாட்டை விசாரணைக்குட்படுத்தாமல் தடுத்த விவகாரத்தில் அப்போதைய மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரும் தொடர்புற்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் காரணமாக குறித்த விவகாரம் தொடர்பில் கோட்டாபய மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தற்போதைக்கு அதுரலியே ரத்ன தேரர் தலைமறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



