மகனுக்காக இலங்கை வரும் கோட்டாபய - பரபரப்பாகும் தென்னிலங்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டாபய அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். சவூதி சென்றதன் பின்னர் அங்கிருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை வரும் கோட்டாபய
அமெரிக்காவில் குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாபய அங்கு செல்வதை தவிர்த்து வருகிறார். அங்கு வாழும் அவரின் மகனின் பாதுகாப்பிற்காகவே அமெரிக்கா செல்வதற்கான திட்டத்தை முழுமையாக கைவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
கோட்டாபய அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் அரசியலில் ஈடுபட தீர்மானம்
கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தில், தாய்நாட்டிற்கு தன்னால் இயன்றவரை சேவையாற்றியதாகவும் தொடர்ந்தும் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
