ரணிலையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும்

Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Podujana Peramuna
By Steephen Jun 14, 2022 05:55 AM GMT
Report

ஒவ்வொருவரிடம் பந்தை கைமாற்றாது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொறுப்பை ஏற்று பதவியில் இருந்து விலக வேண்டும் என வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் நம்பிக்கை சிதைத்த ஜனாதிபதி

ரணிலையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும் | Gota Go Home Ranil

நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப கடும் அர்ப்பணிப்புகளை செய்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சி உருவாக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் அந்த கட்சியை சூழ பெரும் எண்ணிக்கையிலான மக்கள் திரண்டனர்.

அந்த கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நாட்டை கட்டியெழுப்புவார் என்ற கடும் நம்பிக்கையில் கோட்டாபய ராஜபக்சவை மக்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.

எனினும் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை சிதைக்க ஆரம்பித்தார்.இதுவே தற்போதைய குழப்பமான நிலைமைகளுக்கு ஆரம்பம்.

தமது பெற்றோரை போன்று நேசித்த கட்சியை விட்டே அனைவரும் பொதுஜன பெரமுவுக்கு பின்னால் திரண்டனர். பெரிய நம்பிக்கையை வைத்தே அவ்வாறு இணைத்தனர்.

69 லட்சம் வாக்குகள் கோட்டாபய ராஜபக்சவுக்கு கிடைத்ததாக சிலர் கூறுகின்றனர். இல்லை, உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது இவர்கள் எவரும் இருக்கவில்லை. பதவிகளை அர்ப்பணிப்பு செய்தவர்கள் காரணமாகவே வெற்றி கிடைத்தது.

நாளுக்கு நாள் அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கை குறைய ஆரம்பித்ததன் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்தனர்.

நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றவரின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் காரணமாக தற்போது நாட்டில் பொருளாதார, அரசியல் ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ளது என்பது இரகசியமான விடயமல்ல.

போராட்டகாரர்கள் கூறுவது உண்மை

ரணிலையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும் | Gota Go Home Ranil

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கி, அது தான் எடுத்த சிறந்த முடிவு என ஜனாதிபதி நினைப்பார் என்றால், அதுவும் விவசாயிகளுக்கு உரத்தை வழங்காது நாட்டுக்கு ஏற்பட்ட அழிவை போன்றதாகவே இருக்கும்.

தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் வலுவிழந்து விட்டன. போராட்டகாரர்களுக்கு கூறுவது தவறு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்தோம். போராட்டகாரர்கள் கூறுவது சரி என்பது தற்போது எமக்கு புரிகிறது.

நாட்டு மக்கள் மகிந்த ராஜபக்சவை பதவியில் இருந்து போகுமாறு கூறிய பின்னர், ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது, நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்க அல்ல. வீழ்ந்து போயுள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

எனினும் அவர் வேறு வேலைகளை செய்து வருகிறார். இதனால், ஜனாதிபதி பிரதமரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் எஸ்.எம்.ரஞ்சித் சமரகோன் மேலும் தெரிவித்துள்ளார். 

எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணிலையும் அழைத்துக்கொண்டு ஜனாதிபதி வீட்டுக்கு செல்ல வேண்டும் | Gota Go Home Ranil

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US