தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த பொருட்களுடன் இருவர் கைது!
தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த அழகு சாதன பொருட்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (07.03.2023) காலை கடலோர பாதுகாப்பு குழும பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக செய்திகள் தெரிவித்துள்ளன.
இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்குக் கொண்டு வரப்பட்ட 450 கிலோ பூச்சி கொல்லி மருத்துகள்,125 அழகு சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.