கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்புக்கு சொந்தமான பொருட்கள்!
கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவருக்கு சொந்தமான பொருட்களே இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கப்படுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
323 கொள்கலன்கள்
நமது நாட்டின் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜெர்மனியில் உள்ள புலம்பெயர் தமிழர்களை சந்தித்து நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடினார். இந்த நாட்டில் செய்ய முடியாத சில காரியங்களை செய்வதாக எமக்கு உறுதியளித்துள்ளார்.
ஆனால் அது அவருக்கு சாத்தியமானதாக அமையவில்லை.
இங்கு ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டாக வேண்டும். இதை அம்பலப்படுத்தினால் நான் நாளை படுகொலை செய்யப்படலாம். எனக்கு பாதுகாப்பும் வழங்கப்படவில்லை
தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவருக்கு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட சொந்தமான பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் இறுதியாக தாய்லாந்தை வந்தடைந்தது.
2009க்கு முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவரால் கொண்டுவரப்பட்விருந்த பொருட்களே அவை. இந்த நிலையில் அந்த பொருட்களை குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி மூலமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளார்.
ஜெர்மனியில் உள்ள புலம்பெயர் அமைப்புக்கள் என்னை தொடர்பு கொண்டு இந்த விடயம் பற்றி கூறினார்கள்.
இறுதியாக எஞ்சிய ஆயுதங்களை அந்த கொள்கலன்களிலேயே கொண்டுவந்துள்ளனர். ஆனால் என்னால் இதை நிரூபிக்க முடியாது.
நான் பொறுப்புடன் தான் இதை சொல்கின்றேன். அந்த 323 கொள்கலன்களிலும் ஆயுதங்களே இருந்துள்ளன.
சிங்களம் புரிகிறது தானே. நான் இதை கூறிவிட்டேன் ஆகவே என்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது” என கூறியுள்ளார்.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
