எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலையை தொடும் தங்கம்! இன்று பதிவாகியுள்ள விலை
இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் சடுதியாக அதிகரித்து வருகிறது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை பாரியளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி தங்கப்பவுணொன்றின் விலையானது ஒரே வாரத்தில் சுமார் 39,000 ரூபாவினால் குறைவடைந்திருந்தது.
தங்க விலையில் அதிகரிப்பு

இவ்வாறான நிலையில், வீழ்ச்சியடைந்த வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செட்டியார் தெருவின் தகவல்களுக்கு அமைய, தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
கொழும்பு செட்டியார்தெருவில் நேற்றைய தினம் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 173,000 ரூபாவாக பதிவாகியிருந்தது. அதேவேளை 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய நிலவரம்

இந்த நிலையில் இன்றைய தினம் செட்டியார்தெருவில் 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 178,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலையானது 164,700 ரூபாவாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன்பிரகாரம், எதிர்வரும் ஓரிரு தினங்களில் பழைய விலைக்கு தங்கம் விற்பனை செய்யும் சாத்தியம் காணப்படுவதாக செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri