டொலர்களில் எகிறும் தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றைய தினம் 4100 டொலர்களைத் தாண்டியிருந்தது.
இரண்டு வாரங்களுக்கு பிறகு இந்த நிலைமை பதிவாகியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி நேற்று காலை, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4116 டொலராக காணப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
அதன்படி, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 56% வரை அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான சூழலில் நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெரு தகவல்களின் படி தங்க விலையில் அதிகரிப்பு பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இன்றைய தினம் கொழும்பு, செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 326,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விலை நிலவரத்தை ஒப்பிடும் போது 24 கரட் தங்க பவுண் ஒன்று 1000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam