யாழ். சாவகச்சேரியில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயற்சித்தவர் கைது
யாழ். சாவகச்சேரியில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து ஆடு கடத்த முயற்சித்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (06.04.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணமாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்திச் சென்ற முயற்சித்தர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்சத்தினை வாங்க மறுத்த பொலிஸ் அதிகாரி
கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து தப்பிக்க முற்பட்ட போதிலும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி 50,000 ரூபாய் இலஞ்சத்தினை வாங்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரிடம் சாரதி அனுமதி பத்திரம் இல்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு ஆடு மாடுகள்
கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி
பொலிஸ்மா அதிபர் மஞ்சுளா செனரத்தின் வழிகாட்டுதலில் தொடர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.