ஞானசாரதேரர் காணி பிரச்சினையை தீர்ப்பதாக கூறியமை இன அழிப்பின் முன்னெடுப்பே! - அருட்தந்தை மா.சத்திவேல்

Protest People Prisons Mannar
By Independent Writer Oct 04, 2021 05:56 PM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

ஞானசார தேரர் மன்னார் கோவில்பட்டி கிராமத்தின் மக்களைச் சந்தித்து அவர்களின் காணிப் பிரச்சினையை தீர்க்கப்போவதாகத் தெரிவித்துள்ளமை தமிழர் தேசியத்திற்கு எதிராக புதிய முகத்துடனான இன அழிப்பின் முன்னெடுப்பு என்றே கருத வேண்டியுள்ளது என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (04) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நில ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதோடு, அவர்களின் தொல்பொருளியல் திணைக்களத்தினர் மிகப் பழமையான சமய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆக்கிரமிக்க முனைப்போடு களமிறங்கியுள்ளனர்.

அத்தோடு பௌத்த விகாரைகள் கட்டப்படுவதோடு இரவிரவாக அரச விதைகளும் தமிழ்த் தேசத்தில் விதைக்கப்படுகின்றன. தற்போது பௌத்த கலாச்சார மண்டப பிரச்சினையும் தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் கட்டமைப்பு ரீதியில் எதிர்ப்பு தெரிவித்துச் செயல்படுவதற்கான சமூக அரசியல் சக்திகள் இல்லாத நிலையில் தமிழ்த் தேசியத்திற்கான சமய எல்லைகளைக் கடந்து போராடிய மக்களைச் சிதைக்கக் களமிறங்கியுள்ள சக்திகளுக்கு முகம் கொடுக்க தமிழர் தாயகத்தின் இந்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க தலைமைகள் மிகவும் புரிந்துணர்வுடன், விட்டுக்கொடுப்புடன் கூட்டாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதோடு அடுத்த கட்ட நடவடிக்கையில் உடனடியாக இறங்க வேண்டும்.

கடந்த வாரத்தில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகள் கூட்டுச் செயற்பாட்டின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் உணர்த்தி நிற்கின்றன. ஒன்று பேரினவாதத்தின் அதிதீவிர செயற்பாட்டாளரும், இன வன்முறைகளுக்குத் தூபமிடுகின்றவருமான ஞானசார தேரர் மன்னார் கோவில்பட்டி கிராமத்தின் மக்களைச் சந்தித்து அவர்களின் காணிப் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அறிவித்துள்ளமை தமிழர் தேசியத்திற்கு எதிராக புதிய முகத்துடனான இன அழிப்பின் முன்னெடுப்பு என்றே கருத வேண்டியுள்ளது.

அதுமட்டுமல்ல இவர் அங்கு சென்ற விதம், வரவேற்கப்பட்ட விதம் எல்லாமே ஏற்கனவே தீர்மானித்ததை போன்று தோற்றமளிக்கின்றது. பேரினவாதத்தின் காவலனாக விளங்குபவரை மலர் தூவி வரவேற்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத, அங்கீகரிக்க முடியாது செயலுமாகும்.

இரண்டாவதாக சிவசேனை அமைப்பின் இலங்கை காவலரும், இலங்கை பிஜேபி கட்சியின் ஸ்தாபகருமான மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் கடந்த வாரத்தில் "சிவபூமி மன்னாரைச் சிதைக்கும் கிறிஸ்தவ அட்டூழியம்"எனும் தலைப்பின் கீழ் தொடர்ச்சியாக நடாத்திய நிகர்நிலை கலந்துரையாடல். இதில் உண்மைகள் இருக்கலாம்.

எனினும் ஒரே காலப்பகுதியில் முன்வைக்கப்படும் கருத்துக்களும், ஞானசாரரின் கோவில் பட்டி கிராம மக்கள் சந்திப்பும் திட்டமிடப்பட்டதா? இவையெல்லாம் ஒரு அடி மரத்தின் ஆணிவேர் என்றே சிந்திக்கத் தூண்டுகின்றது.

மேற்கூறிய இரண்டு சக்திகளும் தனித்தனியாக இயங்குவது போன்று தோன்றினாலும் நோக்கம் ஒன்றே. தெற்கில் கடந்த காலத்தில் பௌத்த, முஸ்லிம் பிரச்சினையைத் தோற்றுவித்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதோடு கிறிஸ்தவ கத்தோலிக்க முஸ்லிம் முரண்பாட்டினை கட்டவிழ்த்து அரசியல் நாடகமாடினர்.

தற்போது இந்து, கிறிஸ்தவ கத்தோலிக்க முரண்பாட்டை ஊக்குவித்து அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். இதுவே கடந்த காலத்திலும் நிகழ்ந்தது. இந்தப் பின்புலத்தில் வடக்கில் இந்து கிறிஸ்தவ கத்தோலிக்க பிரச்சினையைத் தோற்றுவித்து எம்மவர்களையே மோதிக்கொள்ள வைத்து தமிழர் தாயக தேசியத்தின் அரசியலைச் சிதைத்து, தாயக அரசியல் அரசியலை அழிவுக்குத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்.

இதனைத் தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சமய அரசியல் தலைமைகளும் உன்னிப்பாக அவதானித்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க அவசர நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.

இல்லையெனில் சமயங்கள் பேசும் உண்மைகள் பொய்த்துவிடும். மனிதம் சிதையும். அதனோடு தமிழர் தேசியமும் தேசியத்தின் எல்லைகளும் அழியும். அரசியல் காக்கும் போராட்டமும் நீர்த்து ஏமாந்த மக்களாவோம்.இதனையே பேரினவாத ஆட்சியாளர்களும், சர்வதேச பூகோள அரசியல் சக்திகளும் விரும்புகின்றன.

இதற்கு இடம் கொடுத்தால் நாமும் எதிரிகளின் கைக்கூலிகளாகவே அடையாளம் காணப்படுவோம். ஆதலால் சமய தலைமைகளாக விழிப்போடு செயல்பட்டு சந்தேகம், பயம் தீர்த்து தேச விடுதலைக்காகக் கூட்டுசக்தியாகச் செயல்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Savigny-le-Temple, France

06 Oct, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மாகியம்பதி, சண்டிலிப்பாய், Scarborough, Canada

02 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில், பெரிய அரசடி, வெள்ளவத்தை, Harrow, United Kingdom, Oxford, United Kingdom

28 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், கொழும்பு 15

04 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Lugano, Switzerland

04 Oct, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

05 Oct, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் கிழக்கு, கோண்டாவில் மேற்கு, கனடா, Canada

04 Oct, 2010
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்புத்துறை, Scarborough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Montargis, France

05 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, London, United Kingdom

27 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், அளவெட்டி மேற்கு

03 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US