ஞானச்சுடர் 315ஆவது மலர் வெளியீடு
யாழ்ப்பாணம் தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை பண்பாட்டு பேரவையின் மாதாந்த வெளியீடான ஞானச்சுடர் 315ஆவது மலர் வெளியீடு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகள் தலமையில் இன்று (29) காலை திருமுறை ஓதலுடன் நடைபெற்றுள்ளது.
பலர் பங்கேற்பு
தொடர்ந்து வெளியீட்டு உரையினை இளைப்பாறிய ஆசிரியர் வ.கணேசமூர்த்தி நிகழ்த்தியதை தொடர்ந்து மதிப்பீட்டு உரையினை சைவப்புலவர் ஆசிரியர் பாபுதரன் நிகழ்த்தியுள்ளதுடன் சிறப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆச்சிரம நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.